செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுக VS பாஜக - அண்ணாமலையை ஏக வசனத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்: நாராயணன் காட்டமான அறிக்கை
சென்னை:
அதிமுகவை சேர்ந்த முன்னாள் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நாவடக்கம் தேவை என பாஜகவின் தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது:
“தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுகவின் கடம்பூர் ராஜு, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியுள்ளதோடு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அவர்கள் டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல் துறைக்கு திரும்பி விடுவார் என்றும். ‘அவன், இவன்’ என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு.
டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுகதான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலை அவர்களின் அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல. மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில் தான் என்பதையும், நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள் கடம்பூர் ராஜு அவர்களே.
அண்ணாமலை அவர்கள் ஜெயலலிதா அவர்களை பெருமைப்படுத்தியே பேசினார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத, ஒரு சிறந்த தலைவரை போல் தான் இருப்பேன் என்று அண்ணாமலை அவர்கள் பேசியதில் ஜெயலலிதா அவர்களின் உறுதியான தன்மையை உணர்த்தித்தான் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எது பெருமை, எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்தி துறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது.
கட்சியை அண்ணாமலை அவர்கள் காலி செய்துவிடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள்.
நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து, தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும்” என தெரிவித்துள்ளார்.
- PTI
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:25 pm
தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது
March 27, 2024, 10:58 am
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டி: குழப்பத்தில் வாக்காளர்கள்
March 24, 2024, 5:31 pm
6 மாநிலங்களில் விசிக போட்டி: தொல் திருமாவளவன் அறிவிப்பு
March 24, 2024, 9:30 am
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
March 23, 2024, 11:49 am
2ஜி வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு அனுமதி
March 21, 2024, 2:52 pm
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
March 20, 2024, 10:37 pm
அதிமுக கூட்டணியில் தேமுதிக; 5 தொகுதிகள் ஒதுக்கீடு
March 20, 2024, 2:16 pm