
செய்திகள் இந்தியா
2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சித்திக் காப்பான் விடுதலை
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் நடைபெற்ற தலித் பாலியல் கொலை வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை விடுதலையானார்.
அவர் மீது பயங்கரவாதிகள் மீது போடப்படும் 'உபா' மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு போடப்படட்டது.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் 19 வயது தலித் இளம் பெண் ஒருவர் மாற்று சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என இளம்பெண்ணின் உறவினர்கள் மறுத்த நிலையில், காவல்துறையினரே இரவோடு இரவாக உடலை தகணம் செய்தனர். இது தொடர்பான செய்தியை சேகரிக்க சென்ற சித்திக் காப்பனை உ.பி காவல்துறையினர் கைது செய்தனர்.
அவருடன் 3 பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவரது ஜாமீன் மனுவை லக்னோ உயர்நீதிமன்றம் பலமுறை நிராகரித்தது.
பேட்டி எடுக்க சென்றது எப்படி குற்றமாகும்? எனக் கூறி உச்சநீதிமன்றம் சித்திக் காப்பானுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது.
சிறையில் இருக்கும்போதே சித்திக் காப்பானுக்கு எதிராக சட்ட விரோத பணவரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதனால் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் அவரால் வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில், லக்னோ உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை வழக்கிலிருந்தும் ஜாமீன் வழங்கியதையடுத்து சிறையிலிருந்து சித்திக் காப்பான் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:43 pm
ஹிந்துத்துவம் குறித்து ட்விட்டரில் கருத்து: கன்னட நடிகர் கைது
March 22, 2023, 12:03 am
10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை
March 21, 2023, 10:01 pm
ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?
March 21, 2023, 9:24 pm
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
March 19, 2023, 6:40 pm
பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி இஸட் பிளஸ் பாதுகாப்புடன் வலம்வந்த குஜராத் நபர் பலே மோசடி
March 19, 2023, 5:47 pm
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
March 18, 2023, 4:04 pm
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
March 17, 2023, 4:10 pm
அதானி விவகாரத்தில் தப்பிக்கவே பாஜக நாடாளுமன்றத்தை முடக்குகிறது: காங்கிரஸ் தலைவர்
March 17, 2023, 3:49 pm
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான்: மெஹபூபா முஃப்தி
March 16, 2023, 2:01 pm