
செய்திகள் இந்தியா
2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சித்திக் காப்பான் விடுதலை
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் நடைபெற்ற தலித் பாலியல் கொலை வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை விடுதலையானார்.
அவர் மீது பயங்கரவாதிகள் மீது போடப்படும் 'உபா' மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு போடப்படட்டது.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் 19 வயது தலித் இளம் பெண் ஒருவர் மாற்று சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என இளம்பெண்ணின் உறவினர்கள் மறுத்த நிலையில், காவல்துறையினரே இரவோடு இரவாக உடலை தகணம் செய்தனர். இது தொடர்பான செய்தியை சேகரிக்க சென்ற சித்திக் காப்பனை உ.பி காவல்துறையினர் கைது செய்தனர்.
அவருடன் 3 பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவரது ஜாமீன் மனுவை லக்னோ உயர்நீதிமன்றம் பலமுறை நிராகரித்தது.
பேட்டி எடுக்க சென்றது எப்படி குற்றமாகும்? எனக் கூறி உச்சநீதிமன்றம் சித்திக் காப்பானுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது.
சிறையில் இருக்கும்போதே சித்திக் காப்பானுக்கு எதிராக சட்ட விரோத பணவரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதனால் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் அவரால் வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில், லக்னோ உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை வழக்கிலிருந்தும் ஜாமீன் வழங்கியதையடுத்து சிறையிலிருந்து சித்திக் காப்பான் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm