
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்
வேலூர்:
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லையை தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் சந்தோஷை தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது ஆதரவாளர்களுடன் சென்று, வீடு புகுந்து மாணவியின் குடும்பத்தினரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த மாணவியின் குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்யக்கோரி, மாணவியின் பெற்றோர், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, உறவினர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குடியாத்தம் சிறையில், தலைமைக் காவலராக பணியாற்றி வரும் நிலையில், போலீசார் குடும்பத்திற்கே பாதிப்பு ஏற்படும் போது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
March 20, 2023, 2:21 pm
ஐ.நா.,சபையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி
March 20, 2023, 11:02 am
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் வெள்ளிவிழா
March 19, 2023, 5:41 pm
உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
March 19, 2023, 10:38 am
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - சிறுமி உள்பட 6 பேர் பலி
March 19, 2023, 10:33 am
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடல் தமிழகத்தில் தகனம்
March 18, 2023, 6:52 pm
இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா: அண்ணாமலை மிரட்டல் பேச்சு
March 17, 2023, 6:58 pm
தமிழகத்தில் மார்ச் 20 வரை இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 17, 2023, 6:54 pm