செய்திகள் தமிழ் தொடர்புகள்
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்
வேலூர்:
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லையை தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் சந்தோஷை தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது ஆதரவாளர்களுடன் சென்று, வீடு புகுந்து மாணவியின் குடும்பத்தினரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த மாணவியின் குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்யக்கோரி, மாணவியின் பெற்றோர், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, உறவினர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குடியாத்தம் சிறையில், தலைமைக் காவலராக பணியாற்றி வரும் நிலையில், போலீசார் குடும்பத்திற்கே பாதிப்பு ஏற்படும் போது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm
தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
April 19, 2024, 12:32 pm