செய்திகள் உலகம்
கோத்தபய ராஜபட்சவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்
கொழும்பு:
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யின் கருணை மனுவை ஏற்று விடுவித்தது தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
இலங்கையில் கோத்தபய ராபட்சவின் ஸ்ரீலங்கா பொதுன பெரமுனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பரத லட்சுமண் பிரேமசந்திரா உள்ளிட்ட ஐந்து பேர் கடந்த 2011இல் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. துமிந்தா சில்வாவுக்கு கடந்த 2017இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு கருணை காட்டுமாறு கோரி துமிந்தா சில்வா, அப்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு கருணை மனு அனுப்பினார்.
அதை ஏற்றுக் கொண்ட கோத்தபய ராஜபட்ச அவருக்கு அதிபரின் மன்னிப்பை அளித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதையடுத்து துமிந்தா சில்வா, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் துமிந்தா சில்வாவுக்கு கருணை காட்டப்பட்டதை இலங்கை உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் ரத்து செய்தது. அவரை மீண்டும் கைது செய்யவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக பிரேமசந்திராவின் மனைவியும் மகளும் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மனு மீதான விசாரணையில் பங்கேற்குமாறு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது. அதன்படி அவர் டிசம்பர் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm