நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்

லண்டன்: 

பல்வேறு வெளிநாடுகளிலிருந்து சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் நபர்கள் அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். 

இதனால் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமானோர் வரத் தொடங்கினர்.

2021-ஆம் ஆண்டுக்கு முன் நான்கு ஆண்டுகளில்  299 பேர் மட்டுமே வந்த நிலையில் 2022-ஆம் ஆண்டு அது 45,774 ஆக உயர்ந்தது.

இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். 

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ரிஷி சுனக் இதில் உறுதியாக இருந்தார்.

பணம் பெற்றுக் கொண்டு மக்களைச் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புவதற்கும் லண்டன் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது. 

அதனால் கடந்த வருடம் இங்கிலாந்து வருவோரின் எண்ணிக்கை 29,437 எனக் குறைந்தது.

இந்நிலையில் குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன.

இதன்மூலம் இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அரசாங்கம் ஏற்கெனவே சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. 

தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளது. மேலும் வழக்கறிஞர்களைப் பணியமர்த்தியுள்ளது. மேல்முறையீடுகளைக் கையாள நீதிமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset