செய்திகள் கலைகள்
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக கேரளத்தில் வழக்கு
திருவனந்தபுரம்:
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேரள மாநில காவல் துறைத் தலைவர் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.
"தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய முதற்கட்ட காட்சி சமீபத்தில் வெளியானது.
அதில் நடிகை ஆதா ஷர்மா, புர்க்கா அணிந்துகொண்டு உரையாடும் காட்சியில், "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன்; தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளன். இது கேரளத்தைச் சேர்ந்த 32,000 பெண்களின் கதை' எனக் கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் திருவனந்தபுரம் மாநகர ஆணையர் அலுவலகத்தில் இத்திரைப்படத்துக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளார். இப்புகார் மாநில முதல்வர் பினராயி விஜயன் பார்வைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்தப் புகார் மனு குறித்து வழக்கு பதிவு செய்யுமாறு திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையருக்கு டிஜிபி அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 3:41 pm
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்
December 2, 2025, 8:32 am
மீண்டுடெழுந்த நடிகர் சத்தியா: தனது அசாதாரண நடிப்பால் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார்
November 30, 2025, 11:53 am
தமிழ்நாட்டின் இ.எஸ்.பி படத்தின் தொடக்க விழா: டத்தோ ஸ்ரீ சரவணன் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்
November 28, 2025, 8:01 pm
தளபதி திருவிழாவிற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: உலகளாவிய ரசிகர்கள் மகத்தான ஆதரவு
November 24, 2025, 7:23 pm
பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்: தலைவர்கள் இரங்கல்
November 24, 2025, 3:41 pm
கில் ரீமேக்கிலிருந்து விலகுகிறார் துருவ் விக்ரம்
November 21, 2025, 11:04 pm
டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: மலேசியா வருகிறார் விஜய்
November 19, 2025, 2:48 pm
நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
November 19, 2025, 2:25 pm
திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி அனுமனை அவமதித்துவிட்டார்: வானர சேனா அமைப்பு போலிஸில் புகார்
November 17, 2025, 10:41 pm
