செய்திகள் உலகம்
விமானத்தில் தூங்கியதால் விமான நிலையத்தை தவற விட்ட பைலட்டுகள்
கார்டூம்:
சூடானில் தலைநகர் கார்டுமிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு போயிங் 737 ரக விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை தானியங்கி (ஆட்டோ) இயக்க முறையில் அமைத்த பிறகு விமானிகள் இருவரும் தூங்கிவிட்டனர்.
இதன் விளைவாக, விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டிச் சென்றது. இதை கவனித்த ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ஏடிசி) அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால், இது பலனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது.
அதன்பின்னர் விமானிகள் இருவரும் விழித்துக்கொண்டு விமானத்தை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானத்தில் சிறிது நேரம் ஆட்டோ முறையில் இயங்க செய்து சிற்றுறக்கம் புரிவது இயல்பு தான். ஆனால், அவரது துணை பைலட் கண்காணிப்பார். இங்கு இருவருமே தூங்கியதுதான் பிரச்சினை.
அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 9:50 am
இலங்கைக்கு வருகிறார் ஈரான் அதிபர்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
April 17, 2024, 12:36 pm
லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டம்
April 17, 2024, 10:19 am