செய்திகள் உலகம்
விமானத்தில் தூங்கியதால் விமான நிலையத்தை தவற விட்ட பைலட்டுகள்
கார்டூம்:
சூடானில் தலைநகர் கார்டுமிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு போயிங் 737 ரக விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை தானியங்கி (ஆட்டோ) இயக்க முறையில் அமைத்த பிறகு விமானிகள் இருவரும் தூங்கிவிட்டனர்.
இதன் விளைவாக, விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டிச் சென்றது. இதை கவனித்த ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ஏடிசி) அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால், இது பலனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது.
அதன்பின்னர் விமானிகள் இருவரும் விழித்துக்கொண்டு விமானத்தை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானத்தில் சிறிது நேரம் ஆட்டோ முறையில் இயங்க செய்து சிற்றுறக்கம் புரிவது இயல்பு தான். ஆனால், அவரது துணை பைலட் கண்காணிப்பார். இங்கு இருவருமே தூங்கியதுதான் பிரச்சினை.
அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:44 am
4,000க்கும் மேற்பட்ட வங்காளதேச நாட்டவர்களின் விசாக்களைத் திடீரென்று இரத்து செய்தது ஜக்கிய அரபு அமீரகம்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
