செய்திகள் இந்தியா
சிறைக்கு சென்றார் சித்து
பாட்டியாலா:
34 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள தனது வீட்டிலிருந்து காரில் வந்த சித்துவுடன், நவ்தேஜ் சிங் சீமா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உடனிருந்தனர். அவருடைய வீட்டின் முன்பாக கட்சித் தொண்டர்கள் சிலரும் கூடியிருந்தனர்.
முன்னதாக, மாநில காங்கிரஸ் தலைவர் நரீந்தர் பால் சிறை செல்லும் சித்துக்கு ஆதரவு அளிக்க தொண்டர்கள் கூடி இருக்க வேண்டும் என்றார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 1988ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தன் நண்பர்களுடன் காரில் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, ஷெரன்வாலா கேட் சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது, பின்னால் காரில் வந்த குர்நாம் சிங் (65) என்பவர், தனது வாகனத்துக்கு வழிவிடுமாறு சித்துவிடம் கூறியுள்ளார்.
இதில் இரு தரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்து தாக்கியதில் குர்நாம் சிங் காயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
