செய்திகள் இந்தியா
சிறைக்கு சென்றார் சித்து
பாட்டியாலா:
34 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள தனது வீட்டிலிருந்து காரில் வந்த சித்துவுடன், நவ்தேஜ் சிங் சீமா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உடனிருந்தனர். அவருடைய வீட்டின் முன்பாக கட்சித் தொண்டர்கள் சிலரும் கூடியிருந்தனர்.
முன்னதாக, மாநில காங்கிரஸ் தலைவர் நரீந்தர் பால் சிறை செல்லும் சித்துக்கு ஆதரவு அளிக்க தொண்டர்கள் கூடி இருக்க வேண்டும் என்றார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 1988ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தன் நண்பர்களுடன் காரில் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, ஷெரன்வாலா கேட் சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது, பின்னால் காரில் வந்த குர்நாம் சிங் (65) என்பவர், தனது வாகனத்துக்கு வழிவிடுமாறு சித்துவிடம் கூறியுள்ளார்.
இதில் இரு தரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்து தாக்கியதில் குர்நாம் சிங் காயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:34 am
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
