
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை
சென்னை:
சிபிஐ சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரிகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் 5 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், "சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ தரப்பில் காண்பிக்கப்பட்ட எஃப்ஐஆரில் எனது பெயர் இல்லை. இந்த சோதனை நடத்தப்படும் தருணம் சுவராஸ்யமானது" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 1:19 am
லாட்டரி மார்ட்டின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
June 30, 2022, 9:36 am
நீயா நானா? ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் உச்சம்
June 27, 2022, 12:29 pm
கவிதையில் விஸ்வரூபம் எடுத்தவர் கண்ணதாசன்: கண்ணதாசன் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் புகழாரம்
June 26, 2022, 6:21 pm
நல்ல தலைவர் சமூகத்திற்கு நன்மை செய்யும்போது அது சரித்திரம் ஆகும்: டத்தோஸ்ரீ சரவணன்
June 25, 2022, 1:45 pm
டத்தோஸ்ரீ எம். சரவணன் சிபிஎஸ்சி பள்ளி வளாகம்: டான்ஸ்ரீ முஹம்மது ஹனிஃபா அடிக்கல் நாட்டினார்
June 24, 2022, 5:30 pm