செய்திகள் மலேசியா
சரவாக்கிற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் தற்காலிக சிறப்பு மானியத்தை அரசு வழங்கும்: பிரதமர் அறிவிப்பு
கூச்சிங்:
இந்த ஆண்டுக்கான சரவாக்கின் சிறப்பு மானியத்தின் அளவை மத்திய அரசு 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர், இறுதி விநியோக சூத்திரம் தீர்மானிக்கப்படும் வரை ஒரு தற்காலிக நடவடிக்கையாக, சபாவின் சிறப்பு மானியத்தின் அளவை புத்ராஜெயா இதற்கு முன்னர் படிப்படியாக 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியதாகக் கூறினார்.
சரவாக்கின் வலுவான நிதி நிலையை கருத்தில் கொண்டு, அதற்கு உண்மையில் இதுபோன்ற உயர்வு தேவையில்லை.
ஆனால் நட்புறவின் அடிப்படையில் இந்தத் தொகையை அதிகரிக்க முடிவு செய்ததாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
சரவாக்கிற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாக, 1.5 பில்லியன் ரிங்கிட் சிறப்பு மானியத்தை நான் அறிவிக்கிறேன்.
இன்று இரவு சரவாக்கின் கூச்சிங்கில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ மலேசிய தினக் கொண்டாட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
புத்ராஜயாவிலிருந்து வழங்கப்படும் வருடாந்திர சிறப்பு மானியத்திற்கான சூத்திரத்தை இறுதி செய்வதற்காக, சபா மற்றும் சரவாக்குடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று டத்தொஸ்ரீ அன்வார் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு, ஒதுக்கீடு 300 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு சபா மற்றும் சரவாக்கிற்கு தலா 600 மில்லியன் ரிங்கிட் சிறப்பு மானியங்களை வழங்கியது.
கடந்த மே மாதம், மத்திய அரசின் நிகர வருவாய்க்கான உரிமை தொடர்பான மாநிலத்தின் அரசியலமைப்பு உரிமை கோரல் தீர்க்கப்படும் வரை, சபாவிற்கான 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 10:29 pm
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பை ஆட்சிக் குழுவால் மீற முடியாது: உண்டாங்
September 16, 2026, 8:49 pm
செப்டம்பர் 17 முதல் 23 வரை டீசல், RON97, மானியம் இல்லாத RON95 ஆகியவற்றின் விலைகள் லிட்டருக்கு RM0.35 உயர்வு
September 16, 2026, 8:14 pm
புனித மக்காவுக்கு அருகே ட்ரோன்; இது மிகுந்த கவலைக்குரிய செய்தி: பிரதமர் அன்வார் வருத்தம்
September 16, 2026, 4:36 pm
எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள், இராஜதந்திர ஒத்துழைப்பை மலேசியா நாடும்: ஜாஹித்
September 16, 2026, 4:24 pm
ஷீலா கொலை சம்பவம்; குடும்ப வன்முறையை இயல்பாக்க முடியாது: டாக்டர் லிங்கேஸ்வரன்
September 16, 2026, 3:39 pm
பெர்கேசோவின் மெகா i Lindung u திருவிழா: 60,000 பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது
September 16, 2026, 3:37 pm
