நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்கேசோவின் மெகா i Lindung u திருவிழா: 60,000 பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது

கோலாலம்பூர்:

பெர்கேசோ கோத்தா டமான்சாராவில் உள்ள ஸ்ட்ராண்ட் மாலில் செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு மெகா ஐ லிண்டுங் யு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இதன் மூலம் சுமார் 60,000 பார்வையாளர்களை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்புச் சேவைகளை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நெருக்கமாகக் கொண்டுவரும் வகையில், மனிதவள அமைச்சு மக்களுடன் இணைந்திருப்போம் என்ற லட்சியங்களை முன்னிலைப்படுத்தி, புத்தம் புதிய, அனைவரையும் உள்ளடக்கிய உள்ளடக்கத்தின் மூலம் இந்தத் திருவிழா மீண்டும் பொதுமக்களைச் சென்றடையும் என்று பெர்கேசோ தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்தத் திருவிழாவின் தொடக்க விழாவை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தொடங்கி வைப்பார்.

மேலும், அவர் பெர்கேசோவின் புதிய மாஸ்கோட்டையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

இது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மேலும், இதன் ஏற்பாடு, சமூகம் தகவல்கள், ஆலோசனை சேவைகள் மற்றும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு முயற்சிகளை ஒரு நிம்மதியான மற்றும் குடும்பத்திற்கு உகந்த சூழலில் நேரடியாக அணுகுவதற்கு ஒரு முக்கியமான தளமாக விளங்குகிறது.

இந்த விழா பல்வேறு ஊடாடும் நிகழ்ச்சிகள், சமூகப் பாதுகாப்பு சேவைகள், குடும்ப நடவடிக்கைகள், உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறது என்று பெர்கேசோ அந்த அறிக்கையில் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset