நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துவாங்கு முஹ்ரிஸின் பதவி விலகும் பிரகடனம் செல்லுபடியாகும்; துவாங்கு நட்ஸாருடின் நெகிரி செம்பிலானின் புதிய யாங் டி-பெர்டுவான்: ஆட்சிக் குழு

சிரம்பான்:

துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் நெகிரி செம்பிலானின் டி-பெர்துவான் பெசார் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது செல்லுபடியாகும் என்று நெகிரி செம்பிலான் அரசாங்கம் ஒரு கூட்டு முடிவை எடுத்துள்ளது.

இது சம்பந்தமாக, துவாங்கு நட்ஸாருடின் துவாங்கு ஜாபர், நெகிரி செம்பிலானின் புதிய யாங் டி-பெர்துவான் பெசாராக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

நேற்று மந்திரி புசார் இஸ்மாயில் லசிம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக மாநில அரசின் நிர்வாகக் குழு இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2026 ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டம் 1959-இன் பிரிவு 10-இன் படி, இது செல்லுபடியாகும்.

மேலும் நடைமுறையில் உள்ள உண்டாங் லுவாக் அவர்களால் கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.

நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசாரைத் தேர்ந்தெடுப்பதும் பதவியிலிருந்து நீக்குவதும் நான்காவது தூணின் முழுமையான சிறப்புரிமையாகும்.

மேலும் இந்த சிறப்புரிமையானது 1959-இன் பிரிவுகள் 32 மற்றும் 79, அத்துடன் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவுகள் 71, 181 ஆகியவற்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset