நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி

பெட்டாலிங் ஜெயா:

எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றுக்கு பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் அணி முன்னேறியுள்ளது.

எப்ஏஎஸ் எனப்படும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஜூனியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்க அணி களமிறங்கி வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வணியினர் லீக்கின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

வீரர்கள்,  பயிற்சியாளர்கள் காட்டிய முயற்சி, ஒழுக்கம், போராடும் குணம் மற்றும் ஒத்துழைப்பின் விளைவாகவே இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

காலிறுதிப் போட்டியிலும் தொடர்ந்து போராடி, உங்கள் சிறந்த பங்களிப்பை வழங்குங்கள்.

வெற்றி தொடர்ந்து அணியுடன் இருக்கட்டும்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகத்தின் சார்பாக மீண்டும் வாழ்த்துகள். 

தொடர்ந்து முன்னேறுங்கள், தொடர்ந்து போராடுங்கள் என்று சங்கத்தின் தலைவர் பத்துமலை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset