செய்திகள் இந்தியா
தலைமறைவான 16 இந்தியர்களை ஆஜர்படுத்த செளதி, யுஏஇ சிபிஐயிடம் உதவி கேட்பு
புது டெல்லி:
மோசடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 16 இந்தியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் உதவுமாறு ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் குற்றவாளிகளை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் உடன்பாட்டின்படி அந்நாட்டு அதிகாரிகள் வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதனடிப்படையில் விசாரணை நடத்தி, தகுதியின் அடிப்படையில் குற்றவாளிகள் ஒப்படைக்கப்படுவர்.
இதில் கேரளத்தைச் சேர்ந்த ரஜ்னீஷ் தாஸ், கர்நாடகத்தைச் சேர்ந்த சவூகத் அலி தீர்த்தஹல்லி என்பவர் மீதும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
அதில் ரஜ்னீஷ் தாஸ் மீது, அவர் உதவி மேலாளராக பணியாற்றிய துபாயைச் சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 3 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவூகத் அலி மீது, அவர் நிதி மேலாளராக பணிபுரிந்த கட்டுமான நிறுவனத்தில் ரூ. 2.8 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm
அரவிந்த் கெஜ்ரிவால் கைது ராகுல் காந்தி, ஸ்டாலின் கண்டனம்
March 22, 2024, 12:28 pm