
செய்திகள் இந்தியா
இந்தியா: கங்கையில் நீராட சுமார் 3 மில்லியன் பேர் கூடவுள்ளனர்; இந்தியாவில் தொற்றுப் பரவ வழிவகுக்கும் கங்கா மேளா
புதுடெல்லி:
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், வருடாந்திர கங்கா-சாகர் மேளா திருவிழாவுக்காக சுமார் மூன்று மில்லியன் பேர் கூடவுள்ளனர்.
மீண்டும் கிருமிப்பரவல் அதிகரிக்க அது காரணமாகி விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை ஆற்றில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்திய இந்துக்களின் நம்பிக்கை.
திருவிழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை நடத்தவோ, பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவோ அரசாங்கத்திடம் போதிய வசதிகளும், மனிதவளமும் இல்லை என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சென்ற ஆண்டு, சுமார் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்ற இதேபோன்ற திருவிழா, இந்தியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலுக்கு வழியமைத்தது.
குஜராத்தில் அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்களை ஒரு விளையாட்டரங்கில் ஒன்றாக திரட்டி பல மணி நேரங்கள் அமர வைக்கப்பட்ட பிறகு குஜராத் மாநிலத்தில் தொற்று அதிவேகமாக பரவத்தொடங்கியது.
8 மாதங்களில் இல்லாத அளவு நேற்று, இந்தியாவில் புதிதாக சுமார் 250,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm