செய்திகள் இந்தியா
இந்தியா: கங்கையில் நீராட சுமார் 3 மில்லியன் பேர் கூடவுள்ளனர்; இந்தியாவில் தொற்றுப் பரவ வழிவகுக்கும் கங்கா மேளா
புதுடெல்லி:
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், வருடாந்திர கங்கா-சாகர் மேளா திருவிழாவுக்காக சுமார் மூன்று மில்லியன் பேர் கூடவுள்ளனர்.
மீண்டும் கிருமிப்பரவல் அதிகரிக்க அது காரணமாகி விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை ஆற்றில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்திய இந்துக்களின் நம்பிக்கை.
திருவிழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை நடத்தவோ, பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவோ அரசாங்கத்திடம் போதிய வசதிகளும், மனிதவளமும் இல்லை என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சென்ற ஆண்டு, சுமார் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்ற இதேபோன்ற திருவிழா, இந்தியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலுக்கு வழியமைத்தது.
குஜராத்தில் அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்களை ஒரு விளையாட்டரங்கில் ஒன்றாக திரட்டி பல மணி நேரங்கள் அமர வைக்கப்பட்ட பிறகு குஜராத் மாநிலத்தில் தொற்று அதிவேகமாக பரவத்தொடங்கியது.
8 மாதங்களில் இல்லாத அளவு நேற்று, இந்தியாவில் புதிதாக சுமார் 250,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 9:49 pm
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
January 23, 2026, 12:47 am
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
January 21, 2026, 11:12 pm
பாஜக வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 கோடி வைப்பு தொகை: வட்டி மட்டும் 634 கோடி கிடைத்துள்ளது
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
