செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் பொங்கலுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: ஜனவரி 17ஆம் தேதியும் அரசு விடுமுறை
சென்னை:
பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
”14.1.2022 வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும்,
16.1.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக் கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.1.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும்,
18.1.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.1.2022 திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்,
அதற்கான பணி நாளாக 29.1.2022 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 3:14 pm
தவெகவின் ஆதவ் அர்ஜுனாவின் ரஜினியின் அரசியல் வருகைக் குறித்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எதிர்வினை
March 15, 2026, 7:14 pm
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல்
March 14, 2026, 11:45 pm
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு
March 14, 2026, 7:05 pm
பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயகரமானது: இந்திய அரசு எச்சரிக்கை
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
