செய்திகள் மலேசியா
உயர் மதிப்புள்ள அரிய தனிமத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள மலேசியா ஆர்வமாக உள்ளது
புத்ராஜெயா:
நாட்டின் கனிம வளங்கள் அதிக கூடுதல் மதிப்பை உருவாக்கும் வகையில், இடைநிலைச் செயலாக்கத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி, அரிய தனிமத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள மலேசியா ஆர்வமாக உள்ளது.
இயற்கை சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை துணையமைச்சர் சையத் இப்ராஹிம் சையத் நோ இதனை கூறினார்.
மலேசியாவிற்கான இந்திய தூதர் பி. என். ரெட்டி தலைமையிலான இந்தியக் குடியரசின் பிரதிநிதிகள் குழுவினருடன் சிறப்பு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இந்த விருப்பம் வெளிப்படுத்தப்பட்டது.
அரிய தனிமத் தொழில்துறையில், குறிப்பாக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் மூலம், இந்தியா விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டிருப்பதாக மலேசியா கருதுகிறது.
நாட்டின் அரிய தனிமங்களின் மேம்பாடு, உயர்வான மற்றும் நீடித்த கூடுதல் மதிப்பை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக மலேசியா அதன் செயல்பாட்டு மாதிரி, இடைநிலைச் செயலாக்கத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய உத்தேசித்துள்ளது.
இந்த ஒத்துழைப்பில் தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்ளூர் நிபுணர்களின் திறன் மேம்பாடு ஆகிய அம்சங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 1:37 pm
அம்னோ மீண்டும் சரியான அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும்: ஹாடி
May 7, 2026, 1:36 pm
2026 ஜொகூர் வருகை ஆண்டு; இலக்கை அடையும் பாதையில் உள்ளது: ரவீன்குமார்
May 7, 2026, 1:00 pm
ஜொகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது: ஓன் ஹபிஸ்
May 7, 2026, 12:59 pm
முதியவர் ஜெயகோபியை கொலை செய்த வழக்கில் நான்கு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு
May 7, 2026, 12:19 pm
