செய்திகள் மலேசியா
உணவகத்தில் ரகளை: மதுபோதையில் மேஜைகளை அடித்து நொறுக்கிய நைஜீரியருக்கு போலிஸ் வலைவீச்சு
கோலாலம்பூர்:
ஜாலான் கிள்ளான் லாமா பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில், மதுபோதையில் மேஜைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட நைஜீரிய நபர் ஒருவரைப் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.56 மணியளவில் நிகழ்ந்த இந்த அத்துமீறலால், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஹூ சான் ஹூக், அந்த நபர் உணவகத்திலிருந்த மேஜைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துச் சேதப்படுத்தியதாகத் தெரிவித்தார். தாக்குதலுக்கு அஞ்சிய உணவக உரிமையாளர் அவரைத் தடுக்க முற்படவில்லை என்றும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவகத்திலிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரின் அடையாளம் குறித்துப் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை அந்த நபர் யார் என்பது கண்டறியப்படாத நிலையில், அவரைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் குறித்துத் 'தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427'-ன் கீழ் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துமீறலில் ஈடுபட்ட அந்த வெளிநாட்டவரைப் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகப் போலிசார் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 1:37 pm
அம்னோ மீண்டும் சரியான அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும்: ஹாடி
May 7, 2026, 1:36 pm
2026 ஜொகூர் வருகை ஆண்டு; இலக்கை அடையும் பாதையில் உள்ளது: ரவீன்குமார்
May 7, 2026, 1:00 pm
ஜொகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது: ஓன் ஹபிஸ்
May 7, 2026, 12:59 pm
