நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹார்முஸ் நீரிணையில் 2,000 கப்பல்கள், 20,000 மாலுமிகள் அவதி - உணவு, குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு

டெஹ்ரான்:

ஈ​ரான்​ - அமெரிக்க, இஸ்​ரேல் போர் நடந்து வருவ​தால் ஹார்முஸ் நீரிணையில் 2 ஆயிரம் கப்​பல்​கள் 20 ஆயிரம் மாலுமிகளு​டன் தவித்து வரு​கின்​றன. கப்பல்களின் கையிருப்​பில் உள்ள உணவு, குடிநீர் குறைந்து வரு​வ​தால் அவர்​களுக்கு இக்​கட்​டான சூழல் ஏற்பட்​டுள்​ளது.

ஈரான் - அமெரிக்க, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளுக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடந்து வரு​கிறது. இந்​நிலை​யில் ஹார்​முஸ் நீரிணை வழியே செல்லும் கச்சா எண்​ணெய் கப்​பல்​களை ஈரான் முடக்கியுள்​ளது. இந்த ஜலசந்​தி​யில் ஏராள​மான கப்​பல்​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. ஈரானின் அனு​மதி பெறும் கப்பல்கள் மட்​டுமே இந்த ஜலசந்​தி​யைக் கடந்து வெளிநாடு​களுக்​குச் செல்​கின்​றன.

இந்​நிலை​யில் ஈரானின் முடக்​கம் காரண​மாக ஜலசந்தியில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கப்​பல்​கள், 20 ஆயிரத்​துக்கு மேலான மாலுமிகளு​டன் தவித்து வருவதாகத் தெரிய​வந்​துள்​ளது. மேலும் கப்​பல்​களில் உள்ள உணவு, குடிநீர் போன்​றவை குறைந்து வரு​வ​தால் அவர்​கள் இக்​கட்​டான சூழலுக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset