நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவி படகுச் சேவை: ராயா விடுமுறைக்குப் பின் புதிய மாற்றம்

அலோர் ஸ்டார்: 
 
டீசல் விலைகள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், ஐதீல்ஃபிட்ரி விடுமுறைக்குப் பிறகு லங்காவிக்கான படகு சேவை அட்டவணை மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு சேவைக்கான செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதால், லங்காவி படகு சேவை நடத்துநர்கள் எதிர்கொள்ளும் நஷ்ட அபாயத்தைக் குறைப்பதற்காக இந்த மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்று ஃபெர்ரி லைன் வென்ச்சர்ஸின் பொது மேலாளர் டாக்டர் பஹரின் பஹரோம் கூறினார்.

"தற்போது, லங்க்காவியில் உள்ள படகு ஓட்டுநர்கள் ஒரு கடல் மைலுக்கு 88 சென் கட்டணம் வசூலிக்கின்றனர், இது புலாவ் பங்கோர், புலாவ் தியோமான் போன்ற பிற முக்கிய தீவுகளுக்கான ஓட்டுநர்கள் வசூலிக்கும் கட்டணமான ஒரு கடல் மைலுக்கு RM2 என்பதை விட கணிசமாகக் குறைவாகும்.

"ஒரு நாளைக்கு ஐந்து பயணங்களின் அசல் அட்டவணை, ஒரு செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாகவும், தற்போதைய தேவையுடன் ஒத்துப்போவதற்காகவும், தினமும் மூன்று பயணங்களாகக் குறைக்கப்படும்," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

உயர்ந்த எரிபொருள் செலவுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக முன்மொழியப்பட்ட கூடுதல் கட்டணங்கள் குறித்து விவாதிக்க, மார்ச் 17 அன்று தீபகற்பம், சபா, சரவாக்கிலிருந்து வந்த படகு ஓட்டுநர்கள் போக்குவரத்து அமைச்சகத்துடன் சந்தித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"இருப்பினும், இந்த விண்ணப்பம் குறித்த முடிவு இன்னும் அரசாங்கத்தால் இறுதி செய்யப்படவில்லை.

"தீபகற்பத்தில் உள்ள மற்ற பெரிய தீவுகளை விட லங்ககாவியில் தொழில்துறை டீசல் விலை அதிகமாக உள்ளது. எனவே, அரசாங்கம் ஒரு நியாயமான, நீடித்த தீர்வுக்கான வழிமுறையைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை, உள்ளூர் சுற்றுலாவில் எதிர்மறையான தாக்கங்களைக் குறைக்கும் அதே வேளையில், லங்க்காவியின் படகுப் போக்குவரத்துத் துறையின் நீடித்த தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டாக்டர் பஹரின் மேலும் தெரிவித்தார்.

"பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும், அதே நேரத்தில், பெருகிய முறையில் சவாலான பொருளாதார நிலைமைகள், செலவுகளுக்கு மத்தியில், செயல்பாட்டுத் தகுதியை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset