நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

52 வயது தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம்

பட்டர்வொர்த்: 

காலை உணவின் போது தனது மனைவி காணாமல் போனதைக் கண்டறிந்த கணவரின் அச்சம் இன்று நிஜமானது. இங்கு, சுங்காய் துவா, தாமான் தேசா முர்னியில் உள்ள அவர்களது வீட்டில், மார்பில் கத்திக் குத்துடன் அவரது மனைவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

காலை சுமார் 9.30 மணியளவில், தரை வீட்டின் மேல் தளத்தில் உள்ள ஒரு படுக்கையறையில், 52 வயதான பாதிக்கப்பட்ட பெண், இரத்தம் குளமாகக் கிடந்த நிலையில் கிடந்தார்.

வழக்கம்போல காலை உணவு தயாரிக்க மனைவி கீழே வரததால், பாதிக்கப்பட்டவரின் கணவர் முன்னதாகவே ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்ததாகத் தெரிகிறது.

பின்னர், அவர் படுக்கையறைக் கதவைத் திறந்து பார்க்க முயன்றார், ஆனால் அது உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில், பாதிக்கப்பட்டவர் நினைவற்றுக் கிடந்ததைக் கண்டார்.

இதைத் தொடர்ந்து, வடக்கு செபராங் பெராய் மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையின் குழுவினர், காவல்துறையின் தடயவியல் குழுவுடன் இணைந்து, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் இருந்து ஒரு கத்தியையும் காவல்துறை பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் மனநல நோயாளியாக இருந்து, இன்னும் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதுவரை, ஆரம்பகட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் எந்தவொரு குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை.

நாளை செபரங் ஜெயா மருத்துவமனையில் நடத்தப்பட உள்ள பிரேத பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை, இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset