நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளை இணைந்து கொண்டாடுவோம்; அன்பைப் பகிர்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நோன்பு பெருநாளை இணைந்து கொண்டாடுவோம். அன்பைப் பகிர்வோம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் வாழ்த்துச் செய்தி இதனை கூறினார்.

நூற்றாண்டுகளாக ஒற்றுமை, பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கி வரும் மலேசிய சமூகத்தில், நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் என்பது ஒட்டுமொத்த மலேசியர்களின் கொண்டாட்டமாக விளங்குகிறது.

ஒரு மாத காலம் நோன்பு இருந்து ஹரி ராயாவை அமர்க்களமாகக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

மலேசியர்கள் என்றாலே பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழும் ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டு.

குறிப்பாகப் பெருநாள் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பு  என்ற உயர்ந்த பண்பாட்டின் மூலம், ஒருவருக்கொருவர் இல்லங்களில்  அன்பையும், உணவையும் பகிர்ந்து கொள்ளும் மரபு, உலகில் அரிதாகக் காணப்படும் மனிதநேயத்தின் வெளிப்பாடாகும்.

ஒரு சிலரின் தூண்டுதலாலும் அரசியல் நோக்கங்களாலும் ஏற்படும் சிறிய மோதல்கள், இந்த நாட்டின் ஆழமான ஒற்றுமை உணர்வை எப்போதும் குலைக்க முடியாது.

புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல், அன்பு, பரஸ்பர மரியாதை ஆகியவை மலேசியர்களின் இயல்பான பண்புகளாகவே தொடரும்.

காடும் மேடுமாக இருந்த இந்த நிலத்தை ஒரு முன்னேற்ற நாடாக மாற்றியதில் அனைத்து இனத்தினருக்கும் சமமான பங்கு உண்டு. மலாய் சமூகத்தின் அரவணைப்பும் புரிந்துணர்வும் மற்ற சமூகங்களை இணைத்துச் சென்றது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

எந்தவித தீய சக்திகளும் நம்மிடையே வேரூன்றியுள்ள இந்த நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க முடியாது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இன்பமான சூழலை உருவாக்கி, நம் பாரம்பரியத்தைப் பாதுகாத்து முன்னேறுவோம்.

இந்த புனிதமான நோன்புப் பெருநாளின் நன்னாளில், மலேசியாவில் உள்ள அனைத்து மலாய் நண்பர்களுக்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset