நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராயாவிற்கு முன்னதாக மக்களுக்கு உதவ புத்ராஜாயாவின் முயற்சிகளைப் பின்கள உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

பெட்டாலிங் ஜெயா: 

ஹரி ராயா ஐதிலிஃப்தரிக்கு முன்னதாக மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான புத்ராஜாயாவின் நடவடிக்கைகள், வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட, இலக்கு வைக்கப்பட்ட அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றன என்று அரசாங்க பின்கள உறுப்பினர்கள் சங்கம் (பிபிசி) கூறுகிறது.

இந்தச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜலீஹா முஸ்தபா, பணவீக்க அழுத்தங்கள், ஐதீல்ஃபிட்ரி கொண்டாட்டத்தின் போது மலேசியர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பருவகால செலவின அதிகரிப்பின் மத்தியில் இது குறிப்பாக முக்கியமானது என்று கூறினார்.

ஒரு அறிக்கையில், ஹரி ராயா ஐதில்ஃபிட்ரிக்கு 50% சுங்கக் கட்டண தள்ளுபடி, தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோரின் பயணச் செலவுகளைக் குறைக்கும் என்று ஜலீஹா குறிப்பிட்டார். சுமார் 4,000 நபர்களுக்கு திவால் நிலையிலிருந்து விரைவாக விடுவிக்கப்படுவது பொருளாதாரத்திற்கு உற்பத்தித்திறனுடன் பங்களிக்க உள்ளது.

5.2 மில்லியன் பெறுநர்களுக்கு சும்பங்கன் துனாய் ரஹ்மா (STR) முன்கூட்டியே வழங்குவது, அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மதக் குழுக்களுக்கு சிறப்பு உதவி, அத்துடன் ரமலான் மாதத்தில் விலைக் கட்டுப்பாடுகள், விநியோக உத்தரவாதங்கள் உள்ளிட்ட பிற வாழ்க்கைச் செலவு, சமூக ஆதரவு நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

"மொத்தத்தில் இது நிதி, சமூகக் கொள்கைகளை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து, மக்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திறனை எடுத்துக்காட்டுகிறது," என்று செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

"இது பொதுமக்களின் தேவைகளுக்கும் நாட்டின் நிதித் திறனுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சி தலையீட்டு உத்தியைக் குறிக்கிறது."

இன்று முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 80 சென்ட் உயர்ந்து RM4.72 ஆகியுள்ளதற்கு ஏமாற்றம் தெரிவித்தார். இந்த விலை உயர்வை ஹரி ராயா ஐதீல்ஃபிட்ரி பண்டிகைக்குப் பிறகுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்திருந்தாலும், இந்த உயர்வை தள்ளி வைப்பதன் மூலமோ அல்லது படிப்படியாக செயல்படுத்துவதன் மூலமோ அரசாங்கம் மிகவும் கவனமான அணுகுமுறையைக் கையாண்டிருக்க வேண்டும் என்று ஹம்சா கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset