செய்திகள் தமிழ் தொடர்புகள்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
சென்னை:
புகழ்பெற்ற கவிஞர் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
'வணக்கம் வள்ளுவ' நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ வகை கவிதையை தமிழில் பிரபலப்படுத்திய கவிஞர் ஆவார்.
சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.
நம்பிக்கை இரண்டாவது ஆண்டுவிழாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் கோலாலம்பூர் டி பி.கே எல் கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்து சிறப்பாக சொற்பொழிவாற்றியவர். நம்பிக்கையை விரும்பி வாசிப்பவராக மட்டுமல்லாமல் தமது கவிதைகளையும் தந்து அலங்கரித்தவர்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நம்பிக்கையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 10:53 am
சேலத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் மனு
November 20, 2025, 4:14 pm
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
November 19, 2025, 4:22 pm
சென்னையில் நகை வணிகர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
November 19, 2025, 3:19 pm
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
November 19, 2025, 3:01 pm
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில் முடிவு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
November 19, 2025, 2:03 pm
சபரிமலைக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை
November 18, 2025, 6:02 pm
பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கக்கூடாது: மருத்துவர்கள் அறிவுரை
November 17, 2025, 12:16 pm
சென்னையில் ஒரே நாளில் 111 இடங்களில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றம்
November 16, 2025, 9:25 am
