செய்திகள் மலேசியா
நீர் மட்டம் உயர்கிறது; உணவுப் பொருட்கள் தீர்ந்து போகின்றன: ஹட்யாய் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்
ஹட்யாய்:
தாய்லாந்தின் ஹட்யாயில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள், தங்களுக்கு உதவ தூதரகத்திடம் உதவி கேட்டுள்ளனர்.
ஹட்யாயில் உள்ள சியாம் ஓரியண்டல் ஹோட்டலில் தங்கியுள்ள லில்லி சுரைனி என்ற பெண், தனது முகநூல் மூலம் தூதரகம் மற்றும் பொதுமக்களிடம் உதவி கேட்டார்.
இதில் இரண்டு, நான்கு வயதுடைய தனது இரண்டு குழந்தைகளுக்கு பால் பொருட்கள், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் டயப்பர்கள் உட்பட பல உதவிகளை கேட்டுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தொலைபேசி பேட்டரி தீர்ந்து போகும் நிலையில் உள்ளது.
அருகிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டதால் எங்களுக்கு உதவி தேவை.
உயிர்வாழ உணவு, மினரல் வாட்டர் தேவை என அவர் உதவி கேட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 10:03 pm
கிளந்தானில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் கடுமையான மழை பெய்யும்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 22, 2025, 2:08 pm
கம்போடியாவில் கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
November 22, 2025, 2:08 pm
தாயார் இந்திரா காந்தியிடம் மகள் பிரசன்னாவை ஒப்படையுங்கள்: மஇகா இளைஞர் அணி
November 22, 2025, 11:33 am
கார்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார்: போலிஸ்
November 22, 2025, 11:18 am
மகளை மீட்க போராடும் இந்திரா காந்திக்கு நீதி கிடைக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் கூடினர்
November 22, 2025, 10:58 am
