செய்திகள் மலேசியா
தாயார் இந்திரா காந்தியிடம் மகள் பிரசன்னாவை ஒப்படையுங்கள்: மஇகா இளைஞர் அணி
கோலாலம்பூர்:
கடந்த 16 ஆண்டுகளாக மகள் பிரசன்னாவை பிரிந்து வாழும் தாயார் இந்திரா காந்திக்கு நீதி கிடைக்க மஇகா இளைஞர் அணி போராடும் என்று அதன் தலைவர் அர்விந்த் இன்று தெரிவித்தார்.
16 ஆண்டுகளாக மகள் பிரசான்னாவை மீட்க இந்திரா காந்தி போராடி வருகிறார்.
ஆனால் பிரசான்னாவை போலீசார் இன்னும் கண்டு பிடித்து தாயாரிடம் ஒப்படைக்க வில்லை.
இது பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
ஆகவே இந்திரா காந்தி விவகாரத்தில் மலேசிய போலீசார் தீவிரமாக களம் இறங்கி பிரசான்னாவை கண்டு பிடித்து தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்திரா காந்திக்கு நீதி கிடைக்க இன்று தலைமையில் நடைபெற்ற பேரணியில் ம இகா இளைஞர் அணியின் துணைத் தலைவர் கேசவன், ம இகா தேசிய உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் உட்பட மகளிர், இளைஞர் அணியினர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 10:03 pm
கிளந்தானில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் கடுமையான மழை பெய்யும்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 22, 2025, 2:09 pm
நீர் மட்டம் உயர்கிறது; உணவுப் பொருட்கள் தீர்ந்து போகின்றன: ஹட்யாய் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்
November 22, 2025, 2:08 pm
கம்போடியாவில் கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
November 22, 2025, 11:33 am
கார்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார்: போலிஸ்
November 22, 2025, 11:18 am
மகளை மீட்க போராடும் இந்திரா காந்திக்கு நீதி கிடைக்கக் கோரி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் கூடினர்
November 22, 2025, 10:58 am
