நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சேலத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் மனு

சேலம்:

சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு காவல் ஆணையா் அலுவலகத்தில் தவெக நிா்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த அசம்பாவித சம்பவம் காரணமாக, விஜய்யின் பிரசாரம் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரப் பயணம் மீண்டும் தொடங்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையிலான நிா்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனா்.

அதில், டிசம்பர்  4-ஆம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.

டிசம்பர் 4-ஆம் தேதி காா்த்திகை தீபம் என்பதால், பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து போலீஸாா் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என மத்திய மாவட்ட தவெக செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தெரிவித்தாா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset