செய்திகள் மலேசியா
குரங்கை துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது: போலிஸ்
கோத்தாபாரு:
குரங்கை துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாச்சோக் போலிஸ் தலைவர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் இதனை கூறினார்.
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலான பாச்சோக்கில் குரங்கை துன்புறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 24, 28 வயதுடைய இரண்டு ஆண்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம் அளிக்க வந்த பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் பாச்சோக் போலிஸ் தலைமையகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக வைரலான ஒரு வீடியோ தொடர்பாக பதிவு செய்ய நிலையத்தில் ஆஜரான பின்னர், இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2025, 5:23 pm
சபாவின் 40 சதவீதம் வருவாய்; மாநில உரிமைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம்: பிரதமர்
November 15, 2025, 5:22 pm
சபாவில் தேமு, நம்பிக்கை கூட்டணி, ஜிஆர்எஸ் இடையிலான மோதல்; வெறும் நட்பு போட்டி மட்டுமே: டத்தோஸ்ரீ ரமணன்
November 15, 2025, 5:20 pm
சிவப்பு கடற்பாசியைத் தொட வேண்டாம்: மக்களுக்கு அறிவுறுத்தல்
November 15, 2025, 5:19 pm
சபா சட்டமன்ற தேர்தலில் 73 தொகுதிகளில் 596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல் ஆணையம்
November 15, 2025, 11:42 am
பழைய நண்பர்களுக்கு உதவ சபாவுக்குச் செல்வேன்: கைரி
November 15, 2025, 11:41 am
பிரசன்னா இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வை எழுதுகிறார்: இந்திராவிற்கு 16 ஆண்டுகால மறுக்கப்பட்ட நீதி
November 15, 2025, 11:39 am
