நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ண காலிறுதியாட்டத்தில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண காலிறுதியாட்டத்திற்கு அர்செனல், மென்செஸ்டர் சிட்டி அணிகள் முன்னேறியுள்ளன.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை ஏதன் நுவானெரி, புகாயோ சகா ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்வான்சா சிட்டி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

லிவர்பூல் அணியினர்  0-3 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

செல்சி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வோர்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

நியூகாஸ்டல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்ற்றி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset