நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங் பார்க்கில் தடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான போராட்டங்கள் டத்தாரான் மெர்டேகாவில் எதிரொலித்தன

கோலாலம்பூர்:

அம்பாங் பார்க்கில் தடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான போராட்டங்கள் டத்தாரான் மெர்டேகாவில் எதிரொலித்தன.

ஆசியான் உச்ச நிலை மாநாடு கோலாலம்பூரில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டை டொனால்ட் டிரம்ப் உட்பட உலகெங்கிலும் உள்ள அரசாங்கத் தலைவர்களின் வருகையை கோலாலம்பூர் இன்று வரவேற்கிறது.

இந்நிலையில்  அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து மலேசியர்கள் குழு ஒன்று டத்தாரான் மெர்டேக்காவில் கூடியது.

இன்று காலை டத்தாரான் மெர்டேகாவில் சுமார் 100 பேர் கூடி, டிரம்பின் வருகையை எதிர்த்தனர்.

மேலும் பாலஸ்தீன மக்களின் துயரத்திற்கு ஒற்றுமையைக் காட்டும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பாலஸ்தீன விடுதலை ஆதரவு குழுவான மலேசியாவின் தலைவர் நசாரி இஸ்மாயில், முதலில் அம்பாங்க் பூங்காவில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டம், அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக டத்தாரான் மெர்டேகாவிற்கு மாற்றப்பட வேண்டியிருந்தது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset