செய்திகள் விளையாட்டு
இந்திய கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகளிலும் சூதாட்டம்: 30 பேர் கைது
நியூயார்க்:
இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகள் தொடர்பில் சட்டவிரோத சூதாட்டம் இடம்பெற்றிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் NBA எனும் தேசியக் கூடைப்பந்து அமைப்பின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் உட்பட 30க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பிரபல விளையாட்டாளர்களும் அடங்குவர்.
விளையாட்டின் முடிவை மாற்றியமைக்க சூதாட்டக்காரர்கள் விளையாட்டாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியதாக நம்பப்படுகிறது.
சட்டவிரோதமான சூதாட்ட நடவடிக்கைகளில் poker எனப்படும் விளையாட்டும் அடங்கும்.
பிரபல விளையாட்டாளர்களுடன் விளையாடும் வாய்ப்பு என்று சொல்லிப் பொதுமக்கள் கவரப்பட்டனர்.
முடிவுகள் முன்பே தீர்மானிக்கப்பட்ட நிலையில் பல மில்லியன் டாலர் ஏமாற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதில் நியூயார்க்கின் 4 பெரிய குண்டர் கும்பல்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சூதாட்ட நடவடிக்கைகள் பல ஆண்டுகளாய் நடந்ததாகக் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 11:20 am
2026 உலகக் கிண்ணம்: 212 நாடுகளின் ரசிகர்களிடம் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
October 24, 2025, 11:16 am
சாலா மோசமான வீரர்களில் ஒருவராக முத்திரை குத்தப்படுகிறார்: ஸ்கோல்ஸ்
October 23, 2025, 10:08 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2025, 10:07 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
