நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணிக்காக விக்டர் கியோகெராஸ் இரு கோல்களை அடித்தனர்.

மற்ற கோல்களை  கேப்ரியல் மாகல்ஹேஸ், கேப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் அடித்தனர்.

குறிப்பாக 13 நிமிடங்கள் 4 கோல்களை அடித்து இவர்கள் அர்செனல் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

நியூகாஸ்டல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset