நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: 

கரூர் துயரச் சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

மேலும், இந்த சம்​பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்​வேறு தரப்​பில் இருந்து எதிர்ப்​பு​கள் குவிந்​தன.
 
இந்நிலையில், “விரை​வில் அனைத்து உண்​மை​களும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்​டும் என்​றால் என் மீது கை வையுங்​கள்; தொண்​டர்​களை விட்​டு​விடுங்​கள்” என்று விஜய் காணொலி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். அதன்பின்னர், விஜய் கரூர் நெரிசலில் உயிர்ழந்தோர் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார்.

இந்தச் சூழலில், தற்போது, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset