நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐரோப்பாவிற்கு 100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா பூக்களை கடத்தும் முயற்சியை சுங்கத்துறை முறியடித்தது

சிப்பாங்:

ஐரோப்பாவிற்கு 100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா பூக்களை கடத்தும் முயற்சியை சுங்கத்துறை முறியடித்துள்ளது.

சுங்கத்துறை இயக்குநர் சூல்கிப்லி முஹம்மது இதனை  தெரிவித்தார்.

பிரீமியம் காட்டன் டவல் என்று பெயரிடப்பட்ட துண்டுகள் பெட்டியைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 98.03 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா பூக்களை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இம்முயற்சியை கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்தில்  ராயல் மலேசியன் சுங்கத் துறை செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து அக்டோபர் ஆரம்பம் வரை மூன்று முக்கிய நடவடிக்கைகளில் முறியடித்தது.

கோல்டன் முக்கோணப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களை உள்ளூர் தளவாட வழிகள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு மீண்டும் பேக்கேஜ் செய்வதற்கான மையமாக மலேசியாவை சர்வதேச சிண்டிகேட் மாற்றியதாக நம்பப்படுகிறது.

சுங்கப் பிரிவு, ஏற்றுமதி கிளையுடன் சேர்ந்து தனது துறையின் முழுமையான ஆய்வுகள், உளவுத்துறையின் விளைவாக சிண்டிகேட்டின் தந்திரோபாயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக அனுப்பப்படுவதற்கு முன்பு, நாட்டில் மீண்டும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள் என்று நாங்கள் நம்புகிறோம்.

போதைப்பொருளை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட பெட்டியின் உள்ளூர் நிறுவனமும் விசாரணைக்கு உதவ விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset