
செய்திகள் இந்தியா
இந்தியாவில் மேலும் 21 அணு உலைகள்
புது டெல்லி:
வரும் 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 9 அணு உலைகள் செயல்படும் என்றும் மேலும் 12 உலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 7 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 9 அணு உலைகள் இருக்கும். இதுதவிர, மேலும் 12 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
அந்த அணு உலைகள் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.
முந்தைய காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற ஒரு சில மாநிலங்ககளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தமுறை வட மாநிலங்களில் அணு உலைகள் அமைப்பதற்கு கவனம் செலுத்தப்படும்.
தற்போதைய ஆட்சியில்தான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 10 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதி முதல்முறையாக அளிக்கப்பட்டது. அதுவும், ஒரே ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு சாதனையாகும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm