செய்திகள் இந்தியா
இந்தியாவில் மேலும் 21 அணு உலைகள்
புது டெல்லி:
வரும் 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 9 அணு உலைகள் செயல்படும் என்றும் மேலும் 12 உலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 7 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 9 அணு உலைகள் இருக்கும். இதுதவிர, மேலும் 12 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
அந்த அணு உலைகள் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

முந்தைய காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற ஒரு சில மாநிலங்ககளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தமுறை வட மாநிலங்களில் அணு உலைகள் அமைப்பதற்கு கவனம் செலுத்தப்படும்.
தற்போதைய ஆட்சியில்தான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 10 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதி முதல்முறையாக அளிக்கப்பட்டது. அதுவும், ஒரே ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு சாதனையாகும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
