
செய்திகள் இந்தியா
இந்தியாவில் மேலும் 21 அணு உலைகள்
புது டெல்லி:
வரும் 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 9 அணு உலைகள் செயல்படும் என்றும் மேலும் 12 உலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 7 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 9 அணு உலைகள் இருக்கும். இதுதவிர, மேலும் 12 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
அந்த அணு உலைகள் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.
முந்தைய காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற ஒரு சில மாநிலங்ககளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தமுறை வட மாநிலங்களில் அணு உலைகள் அமைப்பதற்கு கவனம் செலுத்தப்படும்.
தற்போதைய ஆட்சியில்தான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 10 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதி முதல்முறையாக அளிக்கப்பட்டது. அதுவும், ஒரே ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு சாதனையாகும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am