நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

சென்னை: 

வட சென்னை, அதை ஒட்​டிய திரு​வள்​ளூர் மாவட்ட பகு​தி​களில் நேற்று அதி​காலை விடிய விடிய பலத்த இடி, மின்​னலுடன் கூடிய கனமழை கொட்​டித் தீர்த்​தது. 

சென்​னை, புறநகரில் கடந்த சில தினங்​களாக கடும் வெயில் நிலவி வந்​தது. இரவு நேரங்​களில் கடும் புழுக்​கம் நில​வியது. நேற்று முன்​தின​மும் காலை முதலே வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது. காலை நேரத்​தில் லேசான தூரல் நில​வியது.

பின்​னர் மாலை, இரவில் புழுக்​க​மான சூழல் நில​வியது. இந்​நிலை​யில், நேற்று அதி​காலை பலத்த காற்று மற்​றும் இடி, மின்​னலுடன் கனமழை பெய்​தது. காலை 6 மணிக்கு மேலும் மழை நீடித்​தது. இதனால் பெரும்​பாலான சாலைகளில் மழைநீர் தேங்​கியது.

ஞாயிற்​றுக்​கிழமை விடு​முறை நாள் என்​ப​தால் பலர் சிரமத்​துக்​குள்​ளாவது தவிர்க்​கப்​பட்​டது. நேற்று காலை 8.30 மணிவரை பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக சென்னை பாரி​முனை​யில் 11 செமீ, கொளத்​தூர், திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்​டை​யில் தலா 9 செமீ, பொன்​னேரி​யில் 8 செமீ, சென்னை பெரம்​பூர், வில்​லி​வாக்​கத்​தில் தலா 7 செமீ, தண்​டை​யார்​பேட்​டை, ஆட்​சி​யர் அலு​வல​கம், விம்கோ நகர், கொரட்​டூர், காசிமேடு, திரு​வள்​ளூர் மாவட்​டம் சோழ​வரம், கும்​மிடிப்​பூண்​டி​யில் தலா 6 செமீ, மணலி​யில் 5 செமீ, அயனாவரம், மணலி புதுநகர், அண்​ணாநகர் மேற்​கு, திரு​வள்​ளூர் மாவட்​டம் செங்​குன்​றத்​தில் தலா 4 செமீ, அம்​பத்​தூர், கத்​தி​வாக்​கத்​தில் தலா 3 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. இந்த கனமழை​யால் சுரங்​கப்​பாதைகளில்​ எங்​கும்​ போக்​கு​வரத்​து ​பா​திக்​கப்​பட​வில்​லை என ​மாநக​ராட்​சி நிர்​​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset