நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மீலாது நபி, தொடர் விடு​முறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு

சென்னை: 

மீலாது நபி, தொடர் விடு​முறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: 4-ம் தேதி (இன்று) சுப​முகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்​.6,7 வார இறுதி விடு​முறை நாட்​கள் என்​ப​தால் சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு செப்​.4,5 தேதி​களில் 1,115 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. இதேபோல், மாதவரம், கோ​யம்​பேட்​டில் இருந்து 130 பேருந்​துகளும் இயக்​கப்​படு​கின்​றன.

பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்​கும் 350 சிறப்பு பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 

இவ்​வாறு சென்​றவர்​கள் சென்னை திரும்ப செப்​.7-ம் தேதி 875 பேருந்​துகளும் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நாட்​களில் மொத்​தம் 2,470 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட​வுள்​ளன. வார இறு​தி​யில் பயணிக்க 41 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் முன்​ப​திவு செய்​து உள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset