செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை; பீதி கொள்ள வேண்டாம்: சுகாதாரத்துறை விளக்கம்
சென்னை:
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண Influenza A காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு Influenza A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருவோருக்கு சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பலர் தொடர்ந்து உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதை கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த பீதிக்கு காரணம் உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா வைரஸ் தாக்கியதே என கருதப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
