நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா போட்டியில் சிலம்பம் புறக்கணிப்பு; விளையாட்டாளர்களின் நம்பிக்கையை எம்எஸ்என் அழித்துள்ளது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

சுக்மா போட்டியில் சிலம்பம் புறக்கணித்ததன் மூலம் விளையாட்டாளர்களின் நம்பிக்கையை எம்எஸ்என் அழித்துள்ளது.

டிஎஸ்கே குழுமத்தின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

அடுத்த ஆண்டு சுக்மா விளையாட்டுப் போட்டி சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.

இதில் போட்டியிடும் நான்கு கூடுதல் விளையாட்டுகளை இளைஞர், விளையாட்டு அமைச்சு இறுதி செய்துள்ளது.

மலேசிய விளையாட்டுகளின் உச்சக் குழு கூட்டத்தின் மூலம் இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் வெளியிட்ட ஊடக அறிக்கையை நான் வரவேற்கிறேன்.

கூடுதலாக சதுரங்கம், மின் விளையாட்டு, கிரிக்கெட், கபடி ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சோகமான விஷயம் என்னவென்றால் சிலம்பம் ஒட்டுமொத்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

ஆனால் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சரவாக்கில் நடந்த சுக்மாவில் பங்கேற்றபோது அவர் அளித்த அறிக்கையின்படி,

சிலம்பமும் சுக்மா 2026 இல் பதக்க விளையாட்டாக பட்டியலிடப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

பாரம்பரிய இந்திய விளையாட்டான சிலம்பத்தை சுக்மாவில் சேர்ப்பது குறித்து மலேசிய விளையாட்டுகளின் உச்சக் குழு 2023 ஜூன் 12 அன்று முடிவு செய்தது.

இப்போது, அந்த முடிவுக்கு என்ன ஆனது?

மடானி அரசு பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, அவை காலப்போக்கில் மங்கிவிடாமல் இருக்கும்.

சுக்மாவில் சிலம்பம், கபடி பங்கேற்பது, இந்திய இளைஞர்களிடையே திறமைகளை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை வழங்கும்.

இதனால் அவர்கள் கபடியிலும் போட்டியிடும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச அரங்கில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

அதே வேளையில் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை மடானி அரசு நிறைவேற்றாமல் போகிறது.

இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மேலும் இந்த விளையாட்டு ஒலிம்பிக் மட்டத்தில் இல்லாததற்கான காரணம் வெறுமனே அபத்தமானது.

விளையாட்டுகளில், குறிப்பாக தற்காப்புக் கலைகளில் ஈடுபட்டுள்ள பல இளைஞர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆக சிலம்பத்தை சுக்மாவில் இணைப்பதற்காக நடவடிக்கைகளை அமைச்சும் தேசிய விளையாட்டு மன்றமும் எடுக்க வேண்டும் என டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset