நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மேட்டூர் அணையி​லிருந்து தண்​ணீர் வெளி​யேற்​றப்​படு​வ​தால் காவிரிக் கரையோர மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை

மேட்​டூர்: 

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து சரிந்​துள்​ள​தால், காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த கனமழை காரண​மாக அங்​குள்ள அணை​கள் நிரம்​பின. இதையடுத்து, அணை​களில் இருந்து உபரிநீர் திறக்​கப்​பட்​ட​தால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது.

இதனால் மேட்​டூர்அணை நேற்று முன்​தினம் மாலை 6 மணிக்கு முழு கொள்​ளள​வான 120 அடியை 44-வது தடவை​யாக எட்​டியது. தொடர்ந்​து, அணை​யின் பாது​காப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழு​வதும் வெளி​யேற்​றப்​பட்​டது. நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 57,732 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 58,000 கனஅடி​யாக அதி​கரித்​து. ஆனால், நேற்று மதி​யம் 48,000 கனஅடி​யாக குறைந்​தது.

அணையி​லிருந்து விநாடிக்கு 58,000 கனஅடி தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்த நிலை​யில் நேற்று மதி​யம் முதல் 48,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணை நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது.அணை​யின் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக 22,500 கனஅடி, 8 கண் மதகு வழி​யாக 2,500 கனஅடி, உபரிநீர் போக்​கி​யான 16 கண் மதகு வழி​யாக 23,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

அணையி​லிருந்து அதிக அளவில் தண்​ணீர் வெளி​யேற்​றப்​படு​வ​தால் காவிரிக் கரையோர மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. 

மேட்​டூர் அணையி​லிருந்து உபரிநீர் செல்​வதைக்​காண வெளியூர்​களில் இருந்​தும் ஏராள​மானோர் வந்​திருந்​தனர். புதுக் காவிரி பாலத்​தில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​ய​தால் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset