
செய்திகள் தமிழ் தொடர்புகள்
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை:
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,
“புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.
இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவுகூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை. கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று வரும் 18.4.2025 புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 12:33 pm
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது
June 3, 2025, 8:36 am
சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
June 2, 2025, 5:44 pm
கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பியவர்களால் கடும் வாகன நெரிசல்
May 31, 2025, 4:36 pm
தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
May 30, 2025, 6:23 pm
பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது: தந்தையை சாடிய அன்புமணி
May 28, 2025, 1:56 pm
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு
May 28, 2025, 1:51 pm