செய்திகள் உலகம்
அரசாங்கத்தைக் குறைகூறும் போலித் தோற்றக் காணொலி பொய்யானது: முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) தம் உருவத்தை வைத்து அரசாங்கத்தைக் குறைகூறும் போலித் தோற்றக் காணொலியைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் தந்துள்ளார்.
அதைப் பற்றி அவர் இன்று முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
அந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ள குரல் அவருடைய குரல் போலவே இருப்பதாக அவர் சொன்னார்.
பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் வாக்காளர்களைக் கவர மேற்கொள்ளப்படும் மோசடி முயற்சிகள் அச்சத்தைத் தருவதாய்க் கூறினார்.
தேர்தலில் எவருக்கு ஆதரவாக இருந்தாலும் அனைவரும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஹலிமா கேட்டுக்கொண்டார்.
வேட்பாளர்களின் திறமை, கொள்கைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பதற்குப் பதிலாக இவ்வாறு நேர்மையற்ற முறையைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:43 pm
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்
March 5, 2026, 11:09 am
அணு ஆயுதம் ஏந்தும் போர் கப்பல் சோதனை: கிம் ஜாங் உன் கண்காணிப்பு
March 4, 2026, 10:37 pm
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
March 4, 2026, 5:14 pm
ஈரானில் பள்ளி தாக்குதல் குறித்து விசாரணை கோரிக்கை: PBB
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 2:19 pm
