நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏஎப்சி சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அல் நசர்

ரியாத்:

ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதியாட்டத்திற்கு அல் நசர் அணியினர் முன்னேறியுள்ளனர்.

அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் இரண்டாவது ஆட்டத்தில் அல் நசர் அணியினர் எஸ்தாங்லால் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்தாங்லால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக ஜோன் டுரன் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.

இரு ஆட்டங்களின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அல் நசர் அணியினர் ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset