
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் ஃபிராங்க் பார்ட் நகரில் இருந்து லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.
இந்த விமானம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்க வேண்டும்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த இ மெயில் தகவலில் ஜெர்மன் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய பாதுகாப்பு குழுவின் அவசரக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் தலைமையில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னையில் தரை இறங்குவதற்காக வந்து கொண்டு இருக்கும் விமானத்தை முழுமையாக சோதனையிட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர்.
விமானம் நள்ளிரவு 12.16 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சோதனை செய்தனர், விமானத்தில் இருந்த பயணிகளின், கைப்பைகள் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன.
இவ்வாறு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த வெடிகுண்டு சோதனைகள் நடந்தன.
மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் முழு சோதனைக்கு பிறகு இது வெறும் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் போலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am
அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
June 26, 2025, 10:17 pm
சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது
June 24, 2025, 6:02 pm