செய்திகள் தமிழ் தொடர்புகள்
தெருவில் திரியும் நாய்களுக்கும், மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை:
சென்னை மாநகராட்சியில் கால்நடைகள், செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த நாய், மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த அனுமதி அளித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய நிலைக்குழு தலைவர்கள், நிலைக்குழு கூட்டத்தில் மாநகராட்சி உயரதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகார் தெரிவித்தனர். அதற்குப் பதில அளித்த மேயர், நிலைக்குழு கூட்டங்களில் உயரதிகாரிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சென்னையில் செல்லப் பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த, பிரத்யேக மென்பொருளை உருவாக்கி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தவும், அந்த கொட்டகைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட செயல்முறைகளுக்கும் மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டத்தில் மொத்தம் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 3, 2025, 1:22 pm
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
February 2, 2025, 7:33 pm
1967, 1977-ஐ போல் 2026-ல் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை உருவாக்குவோம்’: விஜய்
January 29, 2025, 10:49 pm
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்ம வழக்கு தள்ளுபடி
January 28, 2025, 5:27 pm
திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது: ஸ்டாலின்
January 27, 2025, 12:50 pm
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்யுங்கள்: சீமான் அறைகூவல்
January 27, 2025, 12:43 pm
குடியரசு தின விழாவில் பதக்கம், விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
January 24, 2025, 8:32 pm
நாடாளுமன்ற வக்ஃபு கூட்டுக் குழுவின் 10 எம்பிகள் இடைநீக்கம் ஒரு ஜனநாயக படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்
January 24, 2025, 6:08 pm
ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான் மக்களுக்கு வெளிச்சம்: சீமான்
January 24, 2025, 2:46 pm