
செய்திகள் தமிழ் தொடர்புகள்
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்ம வழக்கு தள்ளுபடி
புது டெல்லி:
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான சனாதன தர்மம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் அவர் மீறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, சனாதனம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 3 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை. எனவே இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்போகிறோம் என்றனர்.
அதையடுத்து இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையேற்ற நீதிபதிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:39 pm
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm