செய்திகள் உலகம்
விமானம் புறப்படுவதற்கு முன்னர் மது அருந்தியதாகச் சந்தேகிக்கப்படும் விமானி கைது
ஜார்ஜியா:
விமானம் புறப்படுவதற்கு முன்னர் மது அருந்தியதாகச் சந்தேகிக்கப்படும் சௌத்வேஸ்ட் விமான நிறுவனத்தின் விமானி கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயது டேவிட், ஜார்ஜியா விமான நிலையத்தில் கைதானார்.
சம்பந்தப்பட்ட விமானம் சவன்னாவிலிருந்து சிக்காகோ நகருக்குப் புறப்படவிருந்ததாக இருந்தது.
டேவிட் மது அருந்தியதற்கான அறிகுறிகள் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
மது அருந்தியதை உறுதிசெய்வதற்கான ரத்த பரிசோதனையை எடுக்க அவர் மறுத்துள்ளார்.
சம்பவத்தின் தொடர்பில் டேவிட் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அவ்விமான நிறுவனம் கூறியது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்பட்ட தடங்கலுக்கு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 3:43 pm
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
February 4, 2025, 12:31 pm