நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மோடியைச் சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

சென்னை: 
தி.மு.க. சட்டத்துறை சார்பில் 3-வது மாநில மாநாடு இன்று (சனிக்கிழமை) ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது 

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை நிகழ்த்தினார் 

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் நடைமுறையானது பிரதமர் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்க நடக்கும் முயற்சி என்று ஸ்டாலின் சொன்னார் 

இது ஒற்றை ஆட்சிக்குதான் வழிவகுக்கும். இது தனிமனிதர் ஒருவரிடம் அதிகாரத்தைக் கொண்டு போய் சேர்க்கும். பாஜக என்ற கட்சிக்கே கூட இது நல்லதல்ல என்று அவர் கருத்துரைத்தார். 

இந்தியாவின் கூட்டாட்சி கருத்தியலுக்கு முரணான சட்டங்களை மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் ஆதரிக்கக் கூடாது என கேட்டுகொள்கிறேன் என்று முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset