
செய்திகள் இந்தியா
கம்யூனிஸ்ட் தொண்டரை கொலை செய்த வழக்கில் 9 ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு ஆயுள் சிறை
தலச்சேரி:
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
19 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிஜித் சங்கரனை பயங்கர ஆயுதங்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினர். இதில் ரிஜித் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
அரசியல் பகையால் நடந்த இக்கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலச்சேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கில் சுதாகரன் , ஜெயேஷ், ரஞ்சித், அஜீந்தரன், அனில் குமார், ராஜேஷ் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm