
செய்திகள் இந்தியா
கம்யூனிஸ்ட் தொண்டரை கொலை செய்த வழக்கில் 9 ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு ஆயுள் சிறை
தலச்சேரி:
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
19 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிஜித் சங்கரனை பயங்கர ஆயுதங்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினர். இதில் ரிஜித் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
அரசியல் பகையால் நடந்த இக்கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலச்சேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கில் சுதாகரன் , ஜெயேஷ், ரஞ்சித், அஜீந்தரன், அனில் குமார், ராஜேஷ் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm