நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் அன்றாட பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து மூவாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், அன்றாட பலி எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் அந்தத் தீவு நாட்டில் 18 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். கொரோனா பெருந்தொற்று நெருக்கடி தொடங்கியதில் இருந்து அங்கு பதிவான ஆக அதிகமான மரண எண்ணிக்கை இதுவாகும்.

நேற்று புதிதாக 3,862 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 630 பேர் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது.

பலியானவர்கள் அனைவரும் 55 முதல் 96 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 9 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும், 8 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்றும், ஒருவர் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டவர் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset